இலங்கையில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று

409 பேருக்கு கொரோனா தொற்று


இலங்கையில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று இதுவரை 1,332 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு இது வரையில் 511,372 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 452,262 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 12,530 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021