Home செய்திகள் திலீபன் நினைவேந்தல்: மட்டக்களப்பில் நான்கு பேருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

திலீபன் நினைவேந்தல்: மட்டக்களப்பில் நான்கு பேருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

நான்கு பேருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன்,  பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகிய நான்கு பேருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூருவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டுள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொ.ப.கஜநாயக்கா மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றிற்கு, குறித்த நான்கு பேரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று 15ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 26ம் திகதிவரை மேற்கொள்ள உள்ளதாக காவல் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறன நிகழ்வு நடந்தால் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு இருப்பதனால் மற்றும் நாட்டில் தற்போது கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக சுகாதார நடவடிக்கைகளை  நாட்டு மக்கள் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதனால் இவ்வாறான நினைவு கூரல் நடவடிக்கையை நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை பிரசுரிக்குமாறு  அறிக்கை செய்தனர்.

இதன் பிரகாரம் 1979 ம் ஆண்டு 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டகோவையின் பிரிவு (106)1 கீழ் காவற்துறையினர் கோரியவாறு தடை உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

இந்த நீதிமன்ற தடை உத்தரவுனை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version