இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழப் பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவியமையே இதற்கு காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை அலட்சியப்படுத்தாமல் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.