ஐரோப்பா கண்டத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

ஐரோப்பா கண்டத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

ஐரோப்பா கண்டம், வரும் பெப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து இலட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக்.

ஐரோப்பா கண்டத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு போதுமான அளவுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே காரணம் என   ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக்.

“நாம் நம் செயல்திட்டத்தை மாற்ற வேண்டும், கொரோனா அதிகம் பரவிய பின் எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக, பரவலைத் தடுக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்றார் ஹான்ஸ்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad ஐரோப்பா கண்டத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்