Home செய்திகள் கொரோனா பயணக் கட்டுப்பாடு-ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்பு

கொரோனா பயணக் கட்டுப்பாடு-ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்பு

UAE Airlines கொரோனா பயணக் கட்டுப்பாடு-ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்புஇலங்கையில் தடுப்பூசிகள்  இரண்டையும் செலுத்திக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

6 நாடுகளை சேர்ந்த பயணிகள் நுழைவு இடை நிறுத்தப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு நாடு திரும்பலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு இராச்சிய வதிவிட அனுமதி வைத்திருக்கும் பயணிகள் ஆகஸ்ட் 5ம் திகதி முதல் முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் அனுமதிக்கப் படுவார்கள்.

இரண்டாவது தடுப்பூசி அளவைப் பெற்ற பிறகு குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும். இதற்காக அவர்கள் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த விலக்குகள் பொருந்தும்.

தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்த விலக்குகளின் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.

Exit mobile version