Home செய்திகள் யாழ்ப்பாணத்தில் திவிரமாகப் பரவும் கொரோனா; 174 பேர் நேற்று அடையாளம்

யாழ்ப்பாணத்தில் திவிரமாகப் பரவும் கொரோனா; 174 பேர் நேற்று அடையாளம்

corona update 2 1 யாழ்ப்பாணத்தில் திவிரமாகப் பரவும் கொரோனா; 174 பேர் நேற்று அடையாளம்யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர் என்று கொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாத்திரம்174 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 17 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 29 பேருக்கும் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 02 பேருக்கும் நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தேசிய செயற்பாட்டு மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version