Home செய்திகள் பலாலி சர்வதேச விமான நிலையம் மூடப்பட காரணம் கொரோனா தான்; யாழ்ப்பாணத்தில் ஜி.எல்.பீரிஸ்

பலாலி சர்வதேச விமான நிலையம் மூடப்பட காரணம் கொரோனா தான்; யாழ்ப்பாணத்தில் ஜி.எல்.பீரிஸ்

பலாலி சர்வதேச விமான நிலையம் மூடப்பட காரணம்பலாலி சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா நிலை காரணமாகவே மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களுக்குமாக மூடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையமும் மூடப்பட்டிருந்தது. அதேபோல் தற்போது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பலாலி விமான நிலையமும் திறக்கப்படும்.

தற்போது பலாலி விமான நிலையத்தில் சில திருத்த வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக ஓடுபாதை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. மேலும் பல விமான சேவைகளுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் காரணமாக சற்று தாமதநிலை காணப்படுகின்றது. எனினும் அந்த வேலைகள் முடிந்த பின்னர் விரைவாக பலாலி விமான நிலையம் திறக்கப்படும்-என்றார். பலாலி சர்வதேச விமான நிலையம் மூடப்பட காரணம் கொரோனா தான்.

இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் ஏதாவது நீங்கள் பேச நினைக்கிறீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

அது ஒரு நீண்டகாலப் பிரச்னை. இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பேசி தீர்க்கவேண்டிய பிரச்னை. எனவே அந்த பிரச்னை தொடர்பில் இரண்டு நாட்டுப் பிரதிநிதிகளும் பேசி ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்தப் பிரச்னையை இனியும் நீண்ட காலத்திற்கு இழுத்துச் செல்ல முடியாது-என்றார்.

Exit mobile version