யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா – இதுவரையில் 469 பேர் பலி

யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை அதிகரித்து செல்கிறது என தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன், யாழ் மாவட்டத்தில் இற்றவரை 469 மரணம் பதிவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.  

யாழ் மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலமைகள் தொடர்பில் ஊடகங் களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் இற்றவரை 469 மரணம் பதிவாகியுள்ளது. தற்போதைய சுழலில் 634 குடும்பங்கள் கொரேனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா அதிகரித்து செல்கிறது. பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.சமுக இடைவெளி முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்.

தற்போதைய சுழலில் தளர்வு நிலை அறிவிக்கப்பட்டுள்ளபோதும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது அதனை கட்டாயம் பின்பற்றபடவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே யாழ்ப்பாணத்தில் கொரோனாவை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தலாம்.

இது மட்டுமன்றி பயணங்கள் இதர செயற்பாடுகளின்போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும்.எவ்வளது தூரம் ஒவ்வோருவரும் கட்டுப்பாட்டுடன் இருப்போமோ அத்தகைய அளவிற்கு நாமும் எமது சமுதாயத்தை பாதுகாத்து கொள்ளலாம்” என்றார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா – இதுவரையில் 469 பேர் பலி