கொரோனாவுக்கு இலங்கையில் மேலும் 74 பேர் பலி; யாழில் இருவர் மரணம்

covid deaths.800 கொரோனாவுக்கு இலங்கையில் மேலும் 74 பேர் பலி; யாழில் இருவர் மரணம்இலங்கையில் கொரோனா காரணமாக ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில் காணப்பட்டு வரும் நிலையில் மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் நேற்று முன்தினம் தொற்றால் 74 பேர் மரணித்துள்ளதாக நேற்று அறிக்கை யிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப் படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,645 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 48 ஆண்களும், 26 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதே வேளையில், யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் நேற்றும் இருவர் உயிரிழந்தனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், வல்வெட்டித்துறையை சேர்ந்த 80 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளால் யாழ். மாவட்டத்தில் தொற்று மரணம் 132ஆக உயர்ந்துள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021