நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவானோர் மட்டுமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொடியேற்ற நிகழ்வினை, பொதுமக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதனால் மக்கள் வீதியிலேயே தேங்காய் உடைத்து வழிபட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.