Home செய்திகள் இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று  பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமென கோவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் (04), 15 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்திருந்தார்.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக் காரணமாக இது வயைில் 544,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 13,821 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version