இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,073 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 94,420 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்தசில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 1,400-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், எல்லைப் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Tamil News