Home செய்திகள் கல்முனை பிராந்தியத்தில் 2 வாரங்களில் 81 பேருக்கு கொரோனா

கல்முனை பிராந்தியத்தில் 2 வாரங்களில் 81 பேருக்கு கொரோனா

2 வாரங்களில் 81 பேருக்கு கொரோனா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 வாரங்களில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

புதுவருடம் மற்றும் தைப்பொங்கல் திருவிழாக்களின் பின்னரான கொரோனா தொற்று நோய் தொடர்பான முன்னேற்ற அறிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையின் பிரகாரம்,

இதுவரை எதுவித தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொள்ளாத 18 பேருக்கும், இரண்டு டோஸ்கள் தடுப்பூசியையும் ஏற்றிக்கொண்ட- 52 பேருக்கும், 1 ஆவது டோஸ் மட்டும் ஏற்றிக்கொண்ட 9 பேருக்கும், 3 டோஸ்கள் தடுப்பூசியையும் ஏற்றிக் கொண்ட- 2 இருவருக்கும் என 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 22, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய பிரிவில் -10, காரைதீவு -10, சாய்ந்தமருது – 7, அக்கரைப்பற்று – 7, அட்டாளைச்சேனை -6, சம்மாந்துறை – 6, நிந்தவூர் -5, இறக்காமம் – 4, பொத்துவில் – 2, நாவிதன்வெளி -2 பேரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெற்றுக்குள்ளானவர்களுக்கு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

16 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டாலும் தொடர்ந்து சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். இது கொரோனா தொற்று நோய் மேலும் பரவுவதை தடுக்கும் என்றும் வைத்திய அதிகாரியினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

Exit mobile version