இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கோவிட்19 தொற்று காரணமாக நேற்று 02 பேர் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கோவிட்19 நோய் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்தியா பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இலங்கையும் கோவிட்19 பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.