கரிம உரம் தொடர்பான சர்ச்சை-சீன தூதரகம் விளக்கம்

சீன தூதரகம் விளக்கம்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உர மாதிரிகளில் ஆபத்தை விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருந்ததாக எழுந்த சர்ச்சையையடுத்து கொழும்பில் உள்ள சீன தூதரகம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பான உண்மைகள் மற்றும் ஒப்பந்தத்தின் சிக்கலை உடனடியாக தீர்க்கும் நோக்கத்துடன், சீன நிறுவனம் மற்றும் இலங்கை அதிகாரிகள் இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

சீன-இலங்கை ஒத்துழைப்பின் மூலமான பரஸ்பர உரையாடலின் மூலம் இதில் காணப்படும் வேறுபாடுகளை நிவர்த்தி செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad கரிம உரம் தொடர்பான சர்ச்சை-சீன தூதரகம் விளக்கம்