இலங்கையில் தொடரும் துயரம்; ஒரே நாளில் 118 பேர் கொரோனாவுக்கு பலி

deaths 0 இலங்கையில் தொடரும் துயரம்; ஒரே நாளில் 118 பேர் கொரோனாவுக்கு பலிஇலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 118 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மரணங்கள் நேற்று இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் அதிக மரணம் நிகழ்ந்த நாளாக நேற்றைய நாள் அமைந்துள்ளது.

இதனால் இதுவரையில் இலங்கையில் கொரேனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,340 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-141-august-01-2021