அவுஸ்திரேலியா-தொடர்ந்த நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல் தமிழ் அகதி குடும்பம்

நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல்

தமிழ் அகதி குடும்பத்திற்கு பாதுகாப்பற்ற இணைப்பு விசாக்களையே அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு நிரந்தரமாக வசிப்பதற்கான விசாக்களை தொழிற்கட்சி அரசாங்கம் வழங்க மறுத்து பாதுகாப்பற்ற இணைப்பு விசாக்களையே அவர்களுக்கு வழங்கியிருக்கிறது.

இந்த விசாக்கள் மூலம் பிலோலா எனப்படும் குவின்ஸ்லாந்தின் பிராந்திய உழைக்கும் வர்க்க நகருக்கு அந்த அகதி குடும்பம் திரும்ப முடியும் என்றாலும் ‘நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல்’ அவர்கள் தலைமேல் தொங்கும் கத்தியாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

Tamil News