உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- 63 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

தொடர்ந்து விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- 63 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ள 63 பேரையும் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறு நாள் அன்று  இடம் பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 65 பேரை கைது செய்தனர்.

அதேவேளை ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர்  தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுவிக்கப்பட்டதையடுத்து வெவ்வேறு இரு வழக்குகளை கொண்ட 63 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவன் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் வழுக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  63பேரையும் எதிர்வரும் 17 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்   உத்தரவிட்டுள்ளார்.