அதிகரித்த விலை ஏற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு

புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு

இலங்கையில் அதிகரித்துள்ள விலையேற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள் பொதுமக்கள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு போராட்டமானது, புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

received 619042785915290 அதிகரித்த விலை ஏற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு

இந்த நேரத்தில் போராட்டத்தை  ஏற்பாடுசெய்த  பிரதேச சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.