Home செய்திகள் ஊடகவியலாளர்கள் மீது வழக்கு- காவல்துறையினருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஊடகவியலாளர்கள் மீது வழக்கு- காவல்துறையினருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

1 116 ஊடகவியலாளர்கள் மீது வழக்கு- காவல்துறையினருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

காவல் துறையினரால் சட்டத்திற்கு முரணாக வழக்கு தொடர்ந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகவியலாளர்களால் திருகோணமலை மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற போலியான நிவாரணம் வழங்கும் சம்பவம் தொடர்பிலான சிசிடிவி ஒளிப்பதிவு தொடர்பில் உப்புவெளி காவல் துறையினரால் ஊடகவியலாளர்கள் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, காவல் நிலைய பொறுப்பதிகாரியால் சட்டத்திற்கு முரணான வகையில் வழக்கு தொடர்ந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக் குழுவின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் 06.08.2021 அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில், “கொரோனா பயணத் தடை அமுலில் இருந்த காலப்பகுதியில் போலியான நிவாரணம் கொடுக்கும் வகையில்  வீடியோ காட்சிகளை ஒளிப்பதிவு செய்த நபர் தொடர்பில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல், குறித்த சம்பவம் தொடர்பில் மதகுரு ஒருவரையும் இரண்டு ஊடகவியலாளர்களையும் சட்டத்திற்கு முரணான வகையில் வழக்கு ஒன்றில் இணைத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயம்” என்றனர்.

Exit mobile version