வாக்களிப்பு தொடர்பான கருத்து பொய்யானது,நாங்கள் யாரும் ரணிலுக்கு வாக்களிக்கவில்லை- TMA

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவுக்கான வாக்களிப்பு தொடர்பில் தெரிவித்த கருத்து பொய்யானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக தெரிவித்திருந்தார். அது பொய்யான கூற்று என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி பொய் சொல்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் ஒருமனதாக டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தோம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லை” என்று அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்தபோது இந்த விஷயத்தையும் இதேபோன்ற பல யோசனைகளையும் நாங்கள் முன்வைத்தோம். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.