காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், ஆர்ப்பாட்டமும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் ஏ9 வீதியில் 1915வது நாளாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.