கொழும்பு: உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு −  காவல்துறையினர்  அறிவிப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய  பிரிவுகளுக்கு  காவல்துறையினரால் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின்  வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தும் உள்ளனர். இதில் 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றனது.

இலங்கையில் பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும்  மக்கள் நேற்று மாலை   தன்னிச்சையாகவே சிறிது, சிறுதாகவும் பிறகு ஆயிரக்கணக்கிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில்,  கூடி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 5,000-க்கும் மேற்பட்டோர், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறிய ஜனாதிபதி பதவி விலகக் கோரி கோஷமிட்டனர்.

அவர்களை கலைக்க வந்த காவல்துறையினருடன் பொதுமக்களில் சிலர் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்.  இதில் வாகனங்கள், தாக்கப்பட்டதோடு வாகனங்களுக்கு போராட்டக்கார்களால் தீ மூட்டிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்கொண்டு வர காவல்துறையினர் குறித்த பகுதிகளில் ஊடரங்கு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Tamil News