தமிழகத்திலிருந்த இலங்கைக்கு பெண் ஒருவரை அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிய 4 பேர் கைது

இலங்கைக்கு பெண் ஒருவரை அழைத்துச் செல்வதாகக் கூறி

இலங்கைக்கு பெண் ஒருவரை அழைத்துச் செல்வதாகக் கூறி: தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை யுவதி ஒருவரை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முற்படுத்திய நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனுஷ்கோடியில் இருந்து நேற்று  அதிகாலை நாட்டுப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் முதலாவது மணல் திட்டில் ஒரு பெண் தனியாக நிற்பதை பார்த்து மெரைன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்றும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் சென்னைக்கு வந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்ததும் வெிசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில்,இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக 4 மீனவர்களுக்கு அவர் பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து கஸ்தூரியை ஏற்றிச்சென்ற மீனவர்கள் நீண்ட நேரம் கடலில் சுற்றி விட்டு நள்ளிரவு 12 மணியளவில் இலங்கை வந்துவிட்டதாக தெரிவித்து தனுஷ்கோடி கடல் பகுதியில் அமைந்துள்ள ஒன்றாம் மணல் திட்டில்  கஸ்துாரியை இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்தே தகவலறிந்த மெரைன் காவல்துறையினர் இலங்கைக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மீனவர் முனீஸ்வரன், படகில் ஏற்றி சென்ற முனிராஜ், சிபிராஜ் மற்றும் சின்ன பாலத்தை சேர்ந்த மீனவ பெண் மற்றும் இலங்கை பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021