Tamil News
Home செய்திகள் கோட்டா அரசுக்கு எதிரான போராட்டத்தில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

கோட்டா அரசுக்கு எதிரான போராட்டத்தில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

அரசுக்கு எதிரான போராட்டத்தில் சித்திரை புத்தாண்டு

கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம் என காலிமுகத்திடலில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய சித்திரை புத்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் – சிங்கள புத்தாண்டு மலர்ந்துள்ள இன்றைய தினத்திலும், ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆறாவது நாளகவும் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், இன்றைய தினம் புத்தாண்டுக் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, நேற்று நள்ளிரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வியாழன் ஆறாவது நாளகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோட்டா அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version