Tamil News
Home செய்திகள் சீன யூனான் மாகாண ஆளுனர் இலங்கைக்கு விஜயம்

சீன யூனான் மாகாண ஆளுனர் இலங்கைக்கு விஜயம்

சீனா – யூனான் மாகாண வெளிவிவகாரங்கள் அலுவலகத்துக்கும் , வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தும் இடையில் பொருளாதாரம் , கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

16 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் 20 ஆம் திகதி வரை சீனாவின் யூனான் மாகாண ஆளுநர் வன்(ங்) யூகோவின் இலங்கைக்கான விஜயத்தின் போது, இலங்கை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பரஸ்பர சுற்றுலா, பொருளாதாரம், சந்தை மற்றும் வர்த்தகம், கல்வி, சுற்றுலாத்துறை, விவசாயம், மனிதக் கலாச்சாரப் பரிமாற்றங்கள், மக்களுடைய வாழ்க்கைத்தரம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Exit mobile version