அமெரிக்கா: நியூயோர்க்கில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சீன குடியேறி மரணமடைந்தார்

கொடூரமாகத் தாக்கப்பட்ட சீன குடியேறி

கொடூரமாகத் தாக்கப்பட்ட சீன குடியேறி: கடந்த ஏப்­ரல் மாதம் ஈஸ்ட் ஹார்­லெ­மில் தள்ளுவண்டியில்  பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த சீன குடி­யே­றி­யான யாவ் பான் மா, (61) கொடூ­ர­மா­கத் தாக்­கப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் நாடு முழு­வ­தும் பெரும் அதிர்ச்­சியை  ஏற்படுத்தியது.

மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட நிலை­யில் அவருக்கு சுவா­சக் கரு­வி­யு­டன் சிகிச்சை அளிக்­கப்­பட்­டார். அவ­ரது தலை­யில் பலத்த காயம் ஏற்­பட்­டி­ருந்­தது என்­றும் மூளை­யில் இரத்­தக் கசி­வும் இருந்­தது என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இந்­நி­லை­யில் சிகிச்சை பல­னின்றி டிசம்­பர் 31ம் திகதி அவர் மர­ண­ம­டைந்­தார் என்று நியூ­யார்க் நகர காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­துள்ளனர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட 49 வயது ஜரோட் போவல் மீது கொலை முயற்சி, தாக்­கு­தல், வெளி­நாட்­ட­வ­ருக்கு எதி­ரான வெறுப்பு உள்­ளிட்ட  குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.