சீன உர நிறுவனம் இலங்கையிடம் இழப்பீடு கோரி சிங்கப்பூரில் வழக்கு

இழப்பீடு கோரி சிங்கப்பூரில் வழக்கு

இலங்கைக்கு இயற்கை உரத் தொகுதியொன்றை அனுப்பிய சீன நிறுவனம் கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றியுள்ளது. உர நிறுவனம் இலங்கையிடம் இழப்பீடு கோரி சிங்கப்பூரில் வழக்கு தொடுத்துள்ளது.

இலங்கையில் தமது உரப் பொருட்களை ஏற்காததால்  இழப்பீடு   கேட்டு சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

8 மில்லியன் டொலரை நஷ்டஈடாகக் கோரியதோடு, கப்பல் போக்குவரத்து மற்றும் சட்டக் கட்டணங்க ளையும் இலங்கை அரசாங்கம் ஈடுசெய்யுமாறு கோரியுள்ளனர்.

இயற்கை உரத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிரிகள் இருப்பதாக தெரியவந்ததையடுத்து, அவற்றை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.