தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது- அதிபர் ஜின்பிங்

சீனா ஆதிக்கம் செலுத்தாது

தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது என  சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஆசியான் என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையிலான 30 ஆண்டுகால உறவை குறிக்கும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்நிகழ்வில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“சீனா மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியலை உறுதியுடன் எதிர்க்கிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண விரும்புகிறது மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதியை கூட்டாக வளர்க்க விரும்புகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யாது. சிறியவர்களை கொடுமைப்படுத்தாது”  என்றார்.