137 Views
குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன்பட்ட நாடுகளின் சந்திப்பொன்றில் சீனாவின் நிதியமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையான கடன்கொடுப்பனவாளர்களையும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.