நளினிக்கு சிறை விடுப்புக்கு அனுமதியளித்த சென்னை மேல் நீதிமன்றம்

நளினிக்கு சிறை விடுப்பு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் உள்ள நளினிக்கு (Nalini) ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது தாயார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சென்னை மேல் நீதிமன்றம் நளினிக்கு சிறை விடுப்பு வழங்கியுள்ளது.

நளினி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நளினியின் தாயார் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளமையால், தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னிலையான தமிழக அரசின் தலைமை குற்றவியல் சட்டத்தரணி, நளினிக்கு 30 நாட்கள் “பரோல்” என்ற சிறை விடுப்பு வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.