இலங்கைப் போர்: பிரிட்டனிற்கு அனுப்பப்பட்ட இரகசிய பரிமாற்றங்களில் உள்ள திருத்தங்களை மாற்றவேண்டும்-நேஸ்பி பிரபு

பிரிட்டனிற்கு அனுப்பப்பட்ட இரகசிய பரிமாற்றங்கள்

பிரிட்டனிற்கு அனுப்பப்பட்ட இரகசிய பரிமாற்றங்கள்

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது என்ன நடைபெற்றது என்பது குறித்த தெளிவாக அறிந்துகொள்வதற்கு  இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திலிருந்து பிரிட்டனிற்கு அனுப்பப்பட்ட இரகசிய பரிமாற்றங்களில் உள்ள திருத்தங்களை மாற்ற வேண்டும் என (British Conservative party) கட்சியில் உறுப்பினர்  மைக்கல் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.

2007 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரிட்டனிற்கு அனுப்பிய இரகசிய ஆவணங்கள் குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் இரகசிய ஆவணங்கள் என வகைப்படுத்திய ஆவணங்களை நேஸ்பி பிரபு பிரிட்டனின் தகவல் சுதந்திர சட்டத்தை பயன்படுத்தி கேள்விக்கு உட்படுத்தினார்.

பிரிட்டனில் அந்த ஆவணங்களில் பெரும்மாற்றங்களை மேற்கொண்டார்கள் எனக்கு அந்த திருத்தங்கள் குறித்து திருப்தியில்லை என்பதை நான் வெளிப்படையாக தெரிவிக்கின்றேன்,நான் இது குறித்து சில காலமாக தெரிவித்து வருகின்றேன், அந்த திருத்தங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் நான் தொடர்ந்தும் தீவிரமாக ஈடுபடப்போகின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பரடைஸ் லொஸ்ட் பரடைஸ் ரிகெய்ன்ட் என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.