இலங்கைத் தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலங்கைத் தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை

இலங்கைத் தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை: “தமிழகத்தில் ஏதிலிகளாக உள்ள இலங்கை தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைத் தமிழர் உள்ள முகாம்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்110-வது விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7469 பழுதடைந்த வீடுகள் 231 கோடி செலவில் கட்டித் தரப்படும் என்றும், அவர்கள் குழந்தைகள் கல்விக்காக 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதகாவும் முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

மேலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல், இலங்கை திரும்ப விரும்பும் பகுதிகள் ஆய்வு செய்தல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றிட நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பொதுத்துறை செயலர், முகாம்வாழ் தமிழர்களுக்கான பிரதிநிதி அடங்கிய குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

அத்துடன் “இலங்கை வாழ் தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்து தருவதை அரசு உறுதி செய்யும். ஆண்டு தோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி வழங்கப்படும். கல்விக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின்  ஏதிலிகள் முகாம்களில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும்.

மேலும் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், முகாம்களை மேம்படுத்து வதற்காகவும் ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப் படும். ரே‌ஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும்   இலங்கை தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021