தனிமனித செல்வாக்கு அடிப்படையில் வேட்பாளர்கள்;ஏற்றுக்கொண்ட மாவை

தமிழரசுக் கட்சியில் தனிநபர்களின் விருப்பத்தின் பேரில் தேர்தல் வேட்பாளர்கள் நியமனம் இனிமேல் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரொருவர் எதிர்வரும் காலங்களில் தேசிய பட்டியல் உறுப்பினர் மற்றும் மாகாணசபைஇ உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கு தாமே வேட்பாளர்களை நியமிப்பதான கருத்தை முன்னிலைப்படுத்தி யாழ். தேர்தல் மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்களிடம் உறுதிமொழியை வழங்குவதாக தொகுதிக்கிளையின் தலைவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையிடம் முறையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மாவை சேனாதிராஜாஇ குறித்த முறைப்பாட்டாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

மாவட்ட உறுப்பினர்கள்இ நான் உட்பட வேட்பாளர் தெரிவுக்குழு சிபாரிசின் அடிப்படையிலே எதிர்காலத்தில் மேற்குறித்த தேசியப்பட்டியல் மற்றும் மாகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அதேபோல் கடந்த காலங்களை போன்று தனி நபர்களினதோ, தனி மனிதர்களினதோ விருப்பத்தின் பேரில் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள்.

அத்துடன் மக்களின் வலிகளையும்இ உணர்வுகளையும் புரிந்தவர்களே எதிர்காலத்தில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவார்களே அன்றி தமிழ் மக்களுடன் தொடர்பில்லாத எவரும் எதிர்காலத்தில் எந்தவொரு பதவியிலும் அமர்த்தப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்ததாக தமிழரசு கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.