கொரோனா தொற்று தடுப்பு முயற்சிகளுக்காக இலங்கைக்கு கனடா நிதி உதவி

கொரோனா தொற்று தடுப்பு முயற்சி

கொரோனா வைரஸுக்கு எதிரரான இலங்கையின் முயற்சிக்கு ஆதரவாக கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு முயற்சிகளுக்காக இந்த உதவி உலக சுகாதார அமைப்பின் மூலம் கிடைத்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சரியான நேரத்தில், அத்தியாவசியமான, நெகிழ்வான ஒத்துழைப்பை வழங்கும் பலதரப்பு அமைப்பின் மூலமான ஒத்துழைப்புக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கொழும்பிலுள்ள கனடிய உயர் ஸ்தானிகராலயம் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.