பாலியல் குற்றச்சாட்டு- பௌத்த மதகுரு கைது

thumbs b c 32ee1d0144583f5e71ee04eb72c26244 பாலியல் குற்றச்சாட்டு- பௌத்த மதகுரு கைது

மட்டக்களப்பு – ஏறாவூர் காவல்துறைப்  பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விகாரையின் பிரதம  மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறொரு மாவட்டத்தை சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பௌத்த மதகுருவாகும் நோக்கில் படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் நீண்ட காலமாக குறித்த பிரதம மதகுரு அந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட சிறுவன் காவல் துறையினரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து குறித்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021