கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இந்தச் சந்திப்பு நேற்று இடம் பெற்றது.
இதன் போது இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்றும் சாரா ஹல்டன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.