மெய்நிகர் வழி ஜனநாயக மாநாடு-இலங்கையை புறக்கணித்த அமெரிக்க அதிபர்

மெய்நிகர் வழி ஜனநாயக மாநாட்

100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுக்காததன் மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இலங்கையை புறக்கணித்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதம்  9 – 10 திகதிகளில் 100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயகமாநாடு நடைபெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியா பாக்கிஸ்தான் மாலைதீவு நேபாளம் ஆகிய தென்னாசிய நாடுகளிற்கு பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தோடு தாய்வான் பிலிப்பைன்ஸ் மெக்சிக்கோ ஆகிய நாடுகளிற்கும் ஜோபைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், சீனா ரஸ்யா ஆகிய நாடுகளை புறக்கணித்த அமெரிக்க அதிபர், இலங்கையையும் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 மெய்நிகர் வழி ஜனநாயக மாநாடு-இலங்கையை புறக்கணித்த அமெரிக்க அதிபர்