மட்டக்களப்பு-எரிபொருள்கள் இன்மையால் மக்கள் பெரும் பாதிப்பு

மக்கள் பெரும் பாதிப்புஎரிபொருள்கள் இன்மையால் மக்கள் பெரும் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிலையங்களில் இரவு பகல் மற்றும் அதிகாலை வேளைகளில் மக்கள் அதிகளவில்  கூடுவதால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுவருகின்றன.

இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடுகள் தொடர்ந்து அவ்வாறான நிலையிலேயே இருப்பதன் காரணமாக எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக குவியும் வாகனங்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நெருக்கடிகள் ஏற்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு நகரில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக இரவு வேளைகளிலும் அதிகாலை வேளைகளிலும் பெருமளவான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றன.

மட்டக்களப்பில் ஒரு சில எரிபொருள் நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகங்கள் நடைபெறுவதனால் மக்கள் குவியும் நிலை காணப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும், எரிபொருள் விலையேற்றம் ஏற்படும் என்று மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்கள் காரணமாக இவ்வாறு எரிபொருள் நிலையங்கள் தொடர்ச்சியாக மக்களால் நிரம்பி வழிவதாக எரிபொருள் நிரப்பு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.