Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்- கால்நடைகளை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த சிங்கள மக்கள

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்- கால்நடைகளை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த சிங்கள மக்கள

மட்டக்களப்பில் கால்நடைகள் சேனைப் பயிர்ச்செய்கைக்குள் உட்புகுந்ததாகத் தெரிவித்து  சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், கூரிய ஆயுதங்களாலும் தாக்கியும் உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைப் பகுதியில் தமிழ் மக்கள் பரப்பரையாக கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில் இந்த மேய்ச்சல் தரைப் பகுதியை பகுதி பகுதியாகப் பிரித்து மகாவலி அபிவிருத்தி எனக்கூறி பெரும்பான்மை சிங்கள மக்களைக் குடியேற்றி அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி மாடு ஒன்று உயிரிழந்துள்ளதுடன், 5 மாடுகள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவம் கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version