Home செய்திகள் மட்டக்களப்பு:சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மட்டக்களப்பு:சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மக்களின்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் மண்டூ – வெல்லாவெளி பிரதான பாதையூடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அதன் ஊடாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீதியூடாக பாடசாலைகள்,அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதேபோன்று காக்காச்சிவட்டை-ஆணைக்கட்டியவெளி பிரதான வீதியிலும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுகின்றது.   மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளன.

Exit mobile version