மட்டு.கல்குடா பௌத்த பாடசாலை;ஆளுநர்,படையினர் ஆசிர்வாதத்துடன் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் கல்குடா வலைவாடி பிரதேசத்தில் ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலையை நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா ஜகம்பத் திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் 23 படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயரதன, அகில இலங்கை புத்ததாசன சபை தவிசாளர் ஜகத் சுமத்திபால, பௌத்த பிக்குகள் , இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு 15 பௌத்த பிக்குகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் சாதாரண தர பரீட்சை வரை ஐந்து வருட பாலி மொழி, சமஸ்கிரதம், தமிழ், ஆங்கிலம் என்ப கற்பிக்கப்படும். அத்தோடு புணாணை, புன்னக்குடா, வலைவாடி பகுதியில் இருந்து 17 பேர் பௌத்த மத கல்வி கற்பதற்கு இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

கிழக்கில் அண்மைக்காலமாக மிக வேகமாக இட ம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்களின் ஒரு பகுதியாகவே இதனை பார்க்கமுடிகிறது என்கின்றனர் நோக்கர்கள்.