Home செய்திகள் இந்திய பிரதமரை சந்திக்க டில்லி விரைகிறார் பஸில்

இந்திய பிரதமரை சந்திக்க டில்லி விரைகிறார் பஸில்

டில்லி விரைகிறார் பஸில்
இந்திய பிரதமரை சந்திக்க டில்லி விரைகிறார் பஸில். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ அடுத்த சில நாட்களில் பதுடில்லி சென்று சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

இச்சந்திப்பு எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது இந்தியாவில் உள்ள சில சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் நிதியமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அவர் கூறினார்.

இந்தியாவுடனான இலங்கை உறவு வலுவான நிலையில் உள்ளது. இலங்கைக்கு தேவை ஏற்படும் போது இந்தியா எப்போதும் உதவிகளை வழங்கி வருவதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விஜயத்தின் போது நிதியமைச்சர் இந்தியாவிடமிருந்து கடன்களைப் பெற உத்தேசிக்கவில்லை எனவும் பீரிஸ் குறிப்பிட்டார். பதிலாக, இந்தியாவிடமிருந்து அதிக முதலீடுகளை நிதியமைச்சர் நாடுவார். அத்துடன், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பது குறித்தும் அவா் பேசுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Exit mobile version