Home உலகச் செய்திகள் இந்தோனேசிய மீன்பிடி படகுகளுக்கு தீ வைத்த அவுஸ்திரேலிய எல்லைப்படை: கூட்டு ரோந்தை இரத்து செய்த இந்தோனேசியா

இந்தோனேசிய மீன்பிடி படகுகளுக்கு தீ வைத்த அவுஸ்திரேலிய எல்லைப்படை: கூட்டு ரோந்தை இரத்து செய்த இந்தோனேசியா

இந்தோனேசிய மீன்பிடி படகு

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக மூன்று இந்தோனேசிய மீன்பிடி படகுகளுக்கு அவுஸ்திரேலிய எல்லைப்படை தீ வைத்ததாக கூறப்படும் நிலையில், இந்தோனேசியா- அவுஸ்திரேலிய படைகளின் கூட்டு ரோந்து நடவடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடல் விவகாரங்கள் மற்றும் மீனவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய எல்லைப்படை மேலதிக விவரங்களை வழங்கிய பின்னரே இந்தோனேசியா- அவுஸ்திரேலியா படைகளின் கூட்டு ரோந்து நடவடிக்கை தொடர்வது குறித்து தீர்மானிக்கப்படும் என இந்தோனேசிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version