அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 4 அகதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதற்கு செயல்பாட்டாளர்களும் அகதிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து அகதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, கொரோனா தொற்று பரவியுள்ள தங்கும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.