அவுஸ்திரேலியா இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் டொலர் நன்கொடை

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இலங்கைக்கான அவசர உதவியை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலராக உயர்த்த அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

அவசர மனிதாபிமான ஆதரவில் ஜூன் மாதம் அவுஸ்திரேலியா 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்கியிருந்தது.

இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை நன்கொடையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.