ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை: மியான்மர் நீதிமன்றம்

4 ஆண்டுகள் சிறை

மியான்மர் நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கி டாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது, அவற்றை இறக்குமதி செய்தது. கோவிட் 19 தடுப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டின்கீழ் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி  1ம் திகதி  அந்நாட்டு இராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய மியான்மர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.  அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில் மியான்மரில் உள்ள ஜூண்டா நீதிமன்றத்தில் நடைபெற்ற மூன்று  குற்றவியல்  வழக்குகளிலும் ஆங் சான் சூகியை குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Tamil News