துப்பாக்கி முனையில் புத்தர் சிலை வைக்க முயற்சி

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி! - ஜே.வி.பி நியூஸ்

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது பதட்டம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (1)இடம் பெற்றுள்ளதுடன், ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலருடன் சென்றிருந்த வேளையில், பொது மக்களை மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார். புல்மோட்டை அரிசி மலை விகாரையினைச் சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான  அடாவடியாக ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு பாதிப்பப்ட்ட தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் தமிழ் மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (1)இடம் பெற்றுள்ளதுடன், ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலருடன் சென்றிருந்த வேளையில், பொது மக்களை மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார்.

இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு பாதிப்பப்ட்ட தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.