இலங்கை-மாத்தறை நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ மீது தாக்குதல்

காலி முகத்திடல் கோட்டா கோ கம மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாத்தறை நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ மீது சிலர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜீப்பில் வந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் போராட்ட பகுதியில் இருந்த கட் அவுட்களை வெட்டி அங்கிருந்த இளைஞர்களை ஆயுதம் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.