Home செய்திகள் மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

தமிழ் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

தமிழ் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் லட்சுமனன் தேவ பிரதீபன் இன்று காலை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அடியாட்களால் தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அடியாட்கள் மற்றும் கிழக்குபல்கழை கலகத்தில் பணிபுரியும்  ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இத் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ச்சியாக இலங்கையில் ஊடக சுதந்திரமும் ஊடகவியலாளரின் சுதந்திரமும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இவ்வாறான தாக்குதல் சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றது .

அரச அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்ற செயற்பாடுகள் இலங்கையில் தொடர்ந்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version